×

ஆட்டோ டிரைவருக்கு ஓராண்டு சிறை

தேனி, ஜூன் 23: பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவினை சேர்ந்தவர் சேவி மகன் முத்துப்பாண்டி. கெங்குவார்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட காமக்காபட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் பிரபு என்ற பிரபாகரன்(23). இவர்கள் இருவரும் தனித்தனியாக ஆட்டோ ஓட்டி வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி காலை 6.30 மணியளவில் முத்துப்பாண்டி காட்ரோட்டில் சவாரி ஏற்றினார்.இதனைபார்த்த பிரபு என்ற பிரபாகரன் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் பிரபாகரன் இரும்புக் கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் அடித்து காயப்படுத்தி, சாதியை சொல்லி திட்டியுள்ளார்.

இதுகுறித்து முத்துப்பாண்டி அளித்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய்பாபா முன்னிலையில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு வக்கீல் இசக்கிவேல் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஆட்டோ டிரைவர் பிரபு என்ற பிரபாகரன் குற்றவாளி என்பதை உறுதி செய்து பிரபு என்ற பிரபாகரனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post ஆட்டோ டிரைவருக்கு ஓராண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Theni ,Sevi ,Muthuppandi ,Kengwarpatti Ram Koil Street ,Periyakulam ,Kengwarpatti ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்