×

மேட்டுப்பாளையத்தில் பைக்கில் வந்தவரிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டாஸ்

 

மேட்டுப்பாளையம், ஜூன் 23: மேட்டுப்பாளையத்தில் பைக்கில் வந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ரமேஷ் (45). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த மே மாதம் 11ம் தேதி பைக்கில் பழைய முனிசிபல் ஆபீஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பாலன் என்பவரது மகன் சூர்யா (21) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரமேஷிடம் இருந்த ரூ.1500ஐ பறித்து சென்றார்.

இந்த வழக்கில் மேட்டுப்பாளையம் போலீசார் சூர்யாவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை எஸ்பி பத்ரி நாராயணன், கலெக்டர் கிராந்திகுமாருக்கு பாடிக்கு பரிந்துரை செய்தார். அவர் சூர்யாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் சூர்யாவை நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

The post மேட்டுப்பாளையத்தில் பைக்கில் வந்தவரிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : hattupalam ,Matthupalaam ,Matthupalam ,Kuntas ,Dinakaran ,
× RELATED ஊட்டி-மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை ஏப்.3 முதல் மீண்டும் தொடக்கம்