×

தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்: ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் பத்மாவதி நகர் அண்ணா தெருவைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் அஜீத்குமார். இவர் திருவள்ளூர் சிவிஎன் சாலையில் டயர் ஷோ ரூம் நடத்தி வருகிறார்.
அஜீத்குமாருக்கும் கிளவர் மெஜஸ்டிக் டவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவரது மகள் கனகபிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2020ல் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அஜீத்குமார் கடையில் இருந்த போது, இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களிடம் விசாரணை செய்தார்.

அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உன் மனைவி எங்கள் மீது வழக்கு தொடர்ந்து, அது நிலுவையில் உள்ளதாகவும், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றும், வழக்கை வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் உன் மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளனர். இதனையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசில் அஜீத்குமார் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ராஜமந்திரி பகுதியைச் சேர்ந்த குருமனா கிருஷ்ணா (எ) கிருஷ்ணா(39) மற்றும் அக்கையபாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்(38) என்பது தெரியவந்தது.

அஜித்குமாரின் மனைவி கனகபிரியா திருமணத்திற்கு முன்பு விசாகப்பட்டினத்தில் உடற்பயிற்சி பயிற்சியாளராக ஜிம்மில் பணிபுரிந்து வந்த கிருஷ்ணா என்பவரிடம் நட்பாக பழகியுள்ளார். இதனையடுத்து கனகபிரியாவை ஏமாற்றி போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து வைத்து, மிரட்டி கிருஷ்ணா பணம் பறித்து வந்துள்ளார். இது சம்பந்தமாக கனக பிரியா விசாகப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து ரூ.10 லட்சம் கேட்டு அவர்கள் அஜீத்குமாரை மிரட்டியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரையும் டவுன் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்: ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Thiruvallur ,Ajithkumar ,Kanagaraj ,Thiruvallur Padmavati Nagar Anna Street ,Ivar Thiruvallur ,CVN Road ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...