×

ரஷ்யாவில் பயங்கரம்: வெடிமருந்து ஆலை வெடித்து சிதறியதில் 4 பேர் பரிதாப பலி

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நேட்டோவுடன் உக்ரைன் இணைய விரும்புவதை எதிர்த்து ரஷ்யா, இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இருநாடுகளிலும் மரணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் தென்மேற்கின் டாம்போர் பகுதியில் உள்ள கொட்டோவ்ஸ்க் நகரில் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் வெடிமருந்துகளை உக்ரைனுக்கு எதிரான போரில் அந்நாட்டின் ராணுவம் பயன்படுத்தி வந்தது. இதனால் தொழிலாளர்கள், மும்முரமாக வெடிமருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்தது. இதனால் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாக அந்நாட்டின் ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ரஷ்யாவில் பயங்கரம்: வெடிமருந்து ஆலை வெடித்து சிதறியதில் 4 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,Ukraine ,NATO ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு