×

ஆயுதபூஜை விடுமுறைக்கால ரயில் முன்பதிவுகள் துவக்கம்

நெல்லை: ஆயுதபூஜையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்காக ரயில் டிக்கெட் முன்பதிவுகள் இன்று தொடங்கியது. ஆயுதபூஜை, விஜயதசமி வரும் அக்டோபர் மாதம் 23,24ம் தேதிகளில் திங்கள், செவ்வாய்கிழமைகளில் வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பே ரயில்களில் முன்பதிவுகள் தொடங்குவது வழக்கம். இதையொட்டி அக்டோபர் 20ம் தேதி வெள்ளிக்கிழமையன்று சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கு இன்று (22ம் தேதி) முன்பதிவுகள் தொடங்குகின்றன.

அக்டோபர் 21, 22 ஆகிய தினங்களில் புறப்பட்டு ஊருக்கு வருவோர் அடுத்தடுத்த தினங்களில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். அக்டோபர் 23ம் தேதியன்று சரஸ்வதி பூஜையன்று ஊருக்கு திரும்புவோர் வரும் 24ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். பண்டிகை காலத்தில் சென்னை, கோவை, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவோர் முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

The post ஆயுதபூஜை விடுமுறைக்கால ரயில் முன்பதிவுகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Armed ,Puja Vacation ,Aramabooja ,Arthapuja ,Vijayathamy ,Aramapuja Vacation ,Dinakaran ,
× RELATED அரியலூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!