×

நாகர்கோவிலில் தரையில் அமர்ந்து அதிமுக ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூன் 22: நாகர்கோவிலில் நேற்று தளவாய்சுந்தரம் தலைமையில் தரையில் அமர்ந்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட அதிமுக சார்பில், நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அமைப்பு செயலாளர் பச்சைமால், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், அணி செயலாளர்கள் சுகுமாறன், மனோகரன், ராஜாராம், வக்கீல் சுந்தரம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சாந்தினி பகவதியப்பன், ஐய்பபன், ஒன்றிய செயலாளர்கள் ஜெஸிம், பொன் சுந்தரநாத், கவுன்சிலர்கள் அட்சயா கண்ணன், லிஜா, அனிலா, பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வழக்கமாக ஆர்ப்பாட்டம் என்றால், நின்று கோஷங்களை எழுப்புவது வழக்கம். ஆனால் நேற்று ஆர்ப்பாட்டத்துக்காக போடப்பட்ட மேடையில் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களும் தரையில் அமர்ந்தனர். பெரும்பாலானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகளின் பேச்சை கேட்க விருப்பம் இல்லாமல் அருகில் இருந்த டீ கடைகள், ஆவின் பாலகங்களில் தஞ்சம் அடைந்தனர். ஆர்ப்பாட்டத்துக்காக கொண்டு வந்த பதாகைகளும் மேடை ஓரத்தில் மொத்தமாக குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

The post நாகர்கோவிலில் தரையில் அமர்ந்து அதிமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Nagercoil ,Thalavaisundaram ,Kumari district ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது