×

கல்லூரி கனவு திட்ட ஆலோசனை கூட்டம்

 

ஊட்டி, ஜூன் 22: நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. இதில், கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசுகையில்,“12ம் வகுப்பு முடித்து தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உயர்கல்வி பயில ஆலோசனை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவது குறித்து தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு உயர்கல்வி பயில விழிப்புணர்வு கூட்டம் கூடலூரில் வரும் 26ம் தேதியும், குன்னூரில் ஜூலை 3ம் தேதியும், ஊட்டியில் ஜூலை 7ம் தேதியும் நடத்தப்பட வேண்டும்.

கல்லூரிகளில் சார்பில் முகாம் நடைபெறும் 3 இடங்களில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட வேண்டும்’’ என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், ஆர்டிஒக்கள் துரைசாமி, பூஷணகுமார், முகமது குதரதுல்லா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சுமதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிக்குமார் சக்கரபாணி, கல்லூரி முதல்வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கல்லூரி கனவு திட்ட ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,School Education Department ,Nilgiri ,Na Muluvan ,Dinakaran ,
× RELATED ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு...