×

அய்யப்பன்தாங்கலில் பரபரப்பு: ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டுவதாக கணவர் மீது நடிகை போலீசில் புகார்

குன்றத்தூர்: அய்யப்பன்தாங்கல் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சின்னத்திரை நடிகை, ‘செல்போனிற்கு ஆபாச மெசேஜ் அனுப்பி கணவர் மிரட்டல் விடுத்து வருகிறார்’ என இன்று காலை மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரட்சிதா மகாலட்சுமி என்ற சின்னத்திரை நடிகை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் போரூர் அருகே அய்யப்பன்தாங்கல் பகுதியில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இதற்கிடையே, கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது ரட்சிதாவும் அவரது கணவரும் தனித்தனியே வசிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகை ரட்சிதா மகாலட்சுமி புகார் அளித்தார். அதில், தன்னைவிட்டு பிரிந்து வாழும் கணவர், தனக்கு கடந்த சில நாட்களாக செல்போனில் மிரட்டல் விடுப்பதுடன், ஆபாச மெசேஜ்களை அனுப்பி வருகிறார் என குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின்பேரில் தினேஷை போலீசார் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். விசாரணையின்போது, நடிகை ரட்சிதா விவாகரத்து பெற விரும்பினால் நீதிமன்றத்தை நாடிக்கொள்ளலாம் என தினேஷ் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து நடிகை ரட்சிதாவிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post அய்யப்பன்தாங்கலில் பரபரப்பு: ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டுவதாக கணவர் மீது நடிகை போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Stir ,Kuntharatur ,Ayyappandangal ,
× RELATED பாஜ நிர்வாகி வீட்டில் ரூ.1.50 கோடி கொள்ளை: கோவையில் பரபரப்பு