×

திண்டுக்கல் அருகே போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல், ஜூன் 21: திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் ராமசாமி காலனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(53). இவர் குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Senthilkumar ,Balakrishnapuram Ramasamy Colony ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...