×

பல்லடத்தில் வெவ்வேறு சம்பவம்: 2 தொழிலாளர்கள் தூக்குப்போட்டு தற்கொலை

 

பல்லடம், ஜூன் 21: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரை ஒன்றியம் கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் குமரன் (45).தொழிலாளி. இவர் திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மட்டும் கொடுவாயில் வந்து தங்கி வேலை செய்து வந்தார். மேலும் குமரனுக்கு முதுகுவலி மற்றும் பிற உடல் உபாதைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதேபோன்று பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி செல்லாண்டி அம்மன் வீதியைச் சேர்ந்தவர் முருகன் (38). விசைத்தறி தொழிலாளி.

இவருக்கு சுமதி என்ற மனைவியும், 2 மகள், 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கணவன் – மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு அவரது மனைவி குழந்தைகளுடன் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

The post பல்லடத்தில் வெவ்வேறு சம்பவம்: 2 தொழிலாளர்கள் தூக்குப்போட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Palladam ,Kumaran ,Koduwai ,Pongalurai ,Tirupur ,
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...