×

நூறு நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்களை மாற்ற மநீம கோரிக்கை மனு

விருதுநகர், ஜூன் 21: விருதுநகர் கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ் அளித்துள்ள மனுவில், நூறு நாள் வேலை திட்டம் நடைபெறும் அனைத்து ஊராட்சிகளின் பணிகளை கண்காணிக்க பணித்தள பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களை 100 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி புதியவர்களை நியமனம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் முறைகேடுகளை தடுக்க முடியும். தவறு செய்தால் அடுத்து பணிக்கு வருபவர்களால் தவறுகள் வெளியே வந்து விடும் என பணித்தள பொறுப்பாளர்கள் பயந்து தவறு செய்யாமல் வேலை செய்தனர்.

ஆனால் பல ஊராட்சிகளில் அரசின் உத்தரவை மதிக்காமல் தங்களுக்கு சாதகமாக செயல்படுவோரை ஆண்டுக்கணக்காக பணி தள பொறுப்பாளர்களாக வைத்துள்ளனர். ஆவணத்தில் மாற்றி கணக்கு காட்டினாலும், பணியிடத்தில் மாற்றி பொறுப்புகளை ஒப்படைக்காமல் வேண்டிய நபர்களே தொடர்ந்து பணித்தள பொறுப்பாளர்களாக பணியில் உள்ளனர். கலெக்டர் தலையிட்டு 100 நாட்களுக்கு மேல் மாவட்டத்தில் பணி தள பொறுப்பாளர்களாக பணி செய்வோரை மாற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post நூறு நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்களை மாற்ற மநீம கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Tags : Manima ,Virudhunagar ,District Secretary of ,People's Justice Center ,Kalidas ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...