×

வயிற்றுவலியால் அவதி விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், திருக்காம்புலியூர் ஊராட்சி மேட்டுதிருக்காம்புலியூரை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் சிவா(20). இவர் பிளம்பராக வேலை செய்து வருகிறார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 10ம் தேதி வயிற்று வலி அதிகமாக வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய ராஜலிங்கம் மகன் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த சிவா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவரது தந்தை ராஜலிங்கம் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வயிற்றுவலியால் அவதி விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Rajalingam ,Siva ,Mettuthirukambulyur parish ,Karur ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே கடன் பிரச்னையால் பூ வியாபாரி தற்கொலை