×

பொன்னமராவதி அருகே புதர்மண்டி கிடக்கும் ஏனாதி பெரிய கண்மாய் உடனே அகற்ற விவசாயிகள் கோரிக்கை

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே ஏனாதி பெரிய கண்மாயில் மண்டி கிடக்கும் தாமரைச்செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி பகுதியில் உள்ள பெரிய கண்மாய்களில் ஒன்று ஏனாதி பெரியகண்மாய். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த கண்மாய் தண்ணீர் தூய்மையாக இருக்கும். இதில் குளிப்பவர்கள், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுபவர்கள் மிகவும் எளிதாக செய்து வந்தனர். ஆனால் திடீர் என இப்போது தாமரை செடிகள் மண்டி பூக்கள் பூத்து குலுங்குகின்றது. ஆனால் கண்மாய் நீர் பாசனத்திற்கும், குளிப்பதற்கும் இந்த தாமரை செடிகள் இடையூறாக உள்ளது. எனவே மண்டிக்கிடக்கும் தாமரைச்செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் ரகுபதி பேச்சு

The post பொன்னமராவதி அருகே புதர்மண்டி கிடக்கும் ஏனாதி பெரிய கண்மாய் உடனே அகற்ற விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Budharmandi ,Ponnamaravati ,
× RELATED கடமலைக்குண்டு அருகே நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை