×

வாலிபர் கொலையில் 5 ேபர் மீது வழக்கு

காரைக்குடி, ஜூன் 20: மதுரை மாவட்டம் திருமங்கலம் மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் அறிவழகன் (எ) வினித்(27). இவர் கொலை வழக்கு தொடர்பாக காரைக்குடியில் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட வந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் அவரை வெட்டிக் படுகொலை செய்தது. இந்த வழக்கில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிந்து மதுரை திருமங்கலம் மையிட்டான்பட்டியை சேர்ந்த ஆதிநாராயணன், மேக்ஸ் (எ)கருப்பையா, தனுஷ், குமாரவேல், மனோஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

வினித் குடும்பத்தாருக்கும், ஆதிநாராயணன் தரப்பினருக்கும் மையிட்டான்பட்டி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் விருதுநகர் நகராட்சி மார்க்கெட் ஏலம் எடுக்க வினித் குடும்பத்தினர் தீவிர முயற்சி செய்துள்ளனர். ஏலம் எடுக்க கூடாது என ஆதிநாராயணன் தரப்பினர் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் வினித் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

The post வாலிபர் கொலையில் 5 ேபர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Babar ,Karaikudi ,Vinith ,Tirumangalam Maiitanpatti ,Madurai district ,
× RELATED காரைக்குடியில் கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!!