×

மனைவியை தாக்கிய கணவன்

 

தேவதானப்பட்டி, ஜூன் 20: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி மேகலா(35). இவர் தனது கணவர் தொடர்ந்து தன்னுடன் தகராறு செய்து வருவதாக கூறி, குழந்தைகளுடன் கடந்த 4 மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மகேஸ்வரன் அடிக்கடி மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தன்று அவரை சரமாரியாக தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து மேகலா அளித்த புகாரின் பேரில், ஜெயமங்கலம் போலீசார் மகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மனைவியை தாக்கிய கணவன் appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Maheswaran ,Jayamangalam ,Mekala ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை