×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த வகையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 230 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.67 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,06 லட்சம் மதிப்பிலான முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்க ம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், இயற்கை மரணமடைந்த 4 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்கான நிதியுதவி ரூ.68 ஆயிரத்தை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்கப்படும் திட்டத்தினை காஞ்சிபுரம் (நகர்ப்புறம்) வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், பயன்பெறும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டை கலெக்டர் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : People's ,Collector ,Karteshelvi Mohan ,Kanchipuram ,Karteshvi Mohan ,Kanchipuram District ,Artiste Mohan ,
× RELATED மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்துடன் சேர்க்க கோரிக்கை