×

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

திருவள்ளூர்: ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் தீபம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா போளிவாக்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தற்போதைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட கவர்னர் பரணிதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி மாவட்ட தலைவராக சக்சஸ் கார்த்திகேயன், செயலாளராக வி.டிவி.கோபி, பொருளாளராக சதீஷ், கிளப் சர்வீஸ் நிர்வாகியாக. ஜேமுகிலன் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் போலியோ பிளஸ் சேர்மேனாக பழனி, சுகாதாரப் பிரிவு இயக்குனராக ஆணாழகன் திலீபன் மற்றும் அலுவலக நிர்வாக பொறுப்பாளர்களாக பெருமாள், ஸ்ரீனிவாசன், பாபு, சரவணன், ஆஷிகா, சதீஷ், அமரன், ஆனந்த கிருஷ்ணன், சதாசிவம், ஸ்ரீராஜ், கொண்டபள்ளி கோபால், ராஜ்குமார், அண்ணாமலை சாமி, பார்த்திபன், சதீஷ், வானரசன், ஹரி பிரசாத், ஜெகநாதன், குமார், அன்பழகன், மெய்ஞானசுந்தரம், அரவிந்தன், ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் பதவி பிரமானம் செய்து வைக்கப்பட்டது. வருகின்ற ஜூலை 1 முதல் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் செயல்படுவார்கள் என மாவட்ட கவர்னர் பரணிதரன் தெரிவித்தார்.

The post புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Rotary Club ,Thiruvallur Deepam ,Polivakam ,New Administrators Inauguration Ceremony ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்