×

மின்கம்பி அறுந்து விழுந்து நாய் பலி

பொன்னேரி: பொன்னேரி அருகே, மின்கம்பி அறுந்து விழுந்து நாய் பலியானது. பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின் கம்பிகள் துருப்பிடித்து கிடந்தன. இந்நிலையில், நேற்று மாலை அத்தெருவில் உள்ள மின் கம்பிகள் திடீரென அறுந்து விழுந்தன. அப்போது, நாய் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிர் இழந்தது.

அப்பகுதியில் உள்ளவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்திருந்தால், மின் கம்பி பட்டு உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். தகவல் அறிந்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியினர் இறந்த நாயை அப்புறப்படுத்தினர். உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்த மின்கம்பிகளை சரி செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாதவாறு பழைய மின் கம்பிகளை மாற்றி புதியதாக அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மின்கம்பி அறுந்து விழுந்து நாய் பலி appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Tadaperumbakkam ,Radhakrishnan street ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...