×

போதையில் தோழியிடம் வாலிபர் சில்மிஷம் பைக்கில் இருக்கி அணைச்சு உம்மா… போலீசார் தடுத்து நிறுத்தியதால் தற்கொலை மிரட்டல்

தவளக்குப்பம்: புதுவை அருகே இளம்பெண்ணுடன் பைக்கில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் செய்தார். புதுச்சேரி-கடலூர் சாலை மணவெளி சந்திப்பில் அரியாங்குப்பம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் பைக்கில் நெருக்கமாக அமர்ந்து வந்தனர். பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்தபடியும் சில்மிஷம் செய்தபடியும் அந்த வாலிபர் பைக்கை வேகமாக ஓட்டி வந்துள்ளார். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் கடலூர் மாவட்டம் அருங்கூர் அருகே கீழக்கொல்லையைச் சேர்ந்த வாலிபர் என்பதும், அவருடன் பைக்கில் வந்தவர் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.

புதுச்சேரிக்கு இன்ப சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சேட்டை செய்துள்ளனர். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவ்வழியே வந்த வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீசார், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி அவர்களது பெற்றோருக்கு போன் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அந்த வாலிபர் தன்னை அவமானபடுத்திவிட்டதாக கூறி அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார். இதில் ரத்தக்காயம் ஏற்பட்டதால் அரியாங்குப்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

The post போதையில் தோழியிடம் வாலிபர் சில்மிஷம் பைக்கில் இருக்கி அணைச்சு உம்மா… போலீசார் தடுத்து நிறுத்தியதால் தற்கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Thavalakuppam ,Puducherry-Cudalur Road ,Young ,Chilmisham ,
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...