×

விடுமுறை தினமான நேற்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கட்டண வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள். பெண் உட்பட 2 பேர் குண்டாசில் கைது ஜவ்வாது மலையில் சாராயம் விற்ற

போளூர், ஜூன்18: போளூர் அருகே ஜவ்வாது மலையில் சாராயம் விற்ற பெண் உட்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் ஜவ்வாது மலைப்பகுதியில் தொடர் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வகையில் ஜமுனாமரத்தூர் அடுத்த குனிகாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜ் மகன் தம்பிரான்(37) என்பவர் தொடர்ந்து சாராயம் விற்று வந்ததால் அவரை ஏற்கனவே போலீசார் பலமுறை கைது செய்து சிறையில் அடைத்தனர் கடந்த மாதம் 25ம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தம்பிரானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் அனுப்பிய பரிந்துரை கடிதத்தை ஏற்று கலெக்டர் பா.முருகேஷ் தம்பிரானை குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இதேபோல் போளூர் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தனது குழுவினருடன் சாராய வேட்டை நடத்திய போது ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள தும்பக்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மனைவி மேனகா(30) என்பவர் கள்ள சாராயத்துடன் பிடிபட்டார். இவர் மீதும் ஏற்கனவே பல கள்ளச்சாரய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் பரிந்துரையை ஏற்று கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சிறையில் உள்ள தம்பிரான், மேனகா ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.

The post விடுமுறை தினமான நேற்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கட்டண வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள். பெண் உட்பட 2 பேர் குண்டாசில் கைது ஜவ்வாது மலையில் சாராயம் விற்ற appeared first on Dinakaran.

Tags : Swami ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Kundazi ,Jawwadu Hill ,Polur ,Javvadu Hill ,Kundasil ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...