×

அரச்சலூர் அருகேவாலிபர் சாவில் மர்மம்; பெற்றோர் புகார்

 

ஈரோடு,ஜூன் 19: அரச்சலூர் அருகே வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் செம்படாபுதூரை சேர்ந்தவர் பெருமாள் மகன் அருண் பிரகாஷ் (23). இவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேட்டில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி டைல்ஸ் ஓட்டும் தொழில் செய்து வந்தார். அருண்பிரகாஷ்க்கும், அதே பகுதியில் ஏற்னவே திருமணமான தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த அப்பபெண்ணின் கணவர் பெருந்துறை போலீசில் அளித்த புகாரின் பேரில், அருண்பிரகாஷையும், தேவியையும் விசாரித்து அனுப்பி வைத்தனர்.

இதில், மனவேதனை அடைந்த அருண்பிரகாஷ் கடந்த 16ம் தேதி மாலை தேவியின் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த தேவி மற்றும் அவரது கணவர் அருண்பிரகாஷை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அருண்பிரகாஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரச்சலூர் போலீஸ் ஸ்டேஷனில் அருண்பிரகாஷின் தாயார் பெருமாக்கா மகன் சாவில் தேவி மற்றும் அவரது கணவர் மீது சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

The post அரச்சலூர் அருகேவாலிபர் சாவில் மர்மம்; பெற்றோர் புகார் appeared first on Dinakaran.

Tags : Arachalur ,Erode ,Dinakaran ,
× RELATED அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி