×

நன்னெறி கதைகள் சொல்லும் நிகழ்ச்சி

 

ஊட்டி, ஜூன் 19: பாவேந்தர் இலக்கிய பேரவை மற்றும் மாவட்ட தமிழியக்கம் சார்பில் நன்னெறி கதைகள் சொல்லும் நிகழ்ச்சி ஊட்டியில் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்றது. புலவர் நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். பாவேந்தர் இலக்கிய பேரவை தலைவர் ஜனார்தனன் தலைமை வகித்தார். பாரதிதாசன் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நன்னெறி கதைகளை, நூல்கள் வாயிலாக நீலமலை மாவட்ட பெரியார் வாசக வட்ட தலைவர் ஜெயச்சந்திரன், புலவர் சோலூர் கணேசன், நீலமலை ஜேபி, வாசகர் வட்ட தலைவி அமுதவல்லி, யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை நிறுவனர் சரவணன் ஆகியோர் கதைகள் சொல்லி குழந்தைகளை உற்சாகப்படுத்தினர். வாசகர் வட்ட துணை தலைவர் சக்தி சுரேஷ் நன்றியுரை நிகழ்த்தினார்.

The post நன்னெறி கதைகள் சொல்லும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Bavendar Literary Council ,District Tamiliyakkam ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...