×

வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ தான் பாஜகவின் தொண்டர் படை: புதுக்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

புதுகை: எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ தான் பாஜகவின் தொண்டர் படை என புதுக்கோட்டையில் நடைபெற்ற முதல்வருக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் மூலம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து ஜல்லிக்கட்டு கூட்டமைப்பு சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம், புதுகையில் தஞ்சை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திடலில் இன்று மாலை 4 மணிக்கு மாலை நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 8 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதில்; எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ தான் பாஜகவின் தொண்டர் படை. செந்தில் பாலாஜியை 18 மணிநேரம் சோதனை என்ற பெயரில் கொடுமைபடுத்தியுள்ளனர். 2019, 2021 தேர்தல்களை போல 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவை விரட்டியடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

The post வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ தான் பாஜகவின் தொண்டர் படை: புதுக்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Department of Revenue, Enforcement and CPI ,Volunteer Force of Bajaga ,Minister ,Udaiyanidhi Stalin ,Pudukkotta ,Bajaka ,Modi ,Amitsha ,Department of Revenue, Enforcement ,CPI ,Volunteer Force of the Bajaka ,Udayanidhi Stalin ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...