×

கம்பத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கம்பம், ஜூன் 18: கம்பம் வேலப்பர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(47). பூக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், தனிமையில் வசித்து வந்தார். இவர் சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வரை அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.அங்கு ஜெகதீஸ்வரன் தூக்கி போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இது குறித்து உறவினர்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெகதீஸ்வரன் உடலை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கம்பத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kampam ,Jagatheeswaran ,Velappar Koil Street, Kampam ,Dinakaran ,
× RELATED கம்பத்தில் சுகாதார வளாகம் மீது வேரோடு மரம் சாய்ந்ததால் பரபரப்பு