×

அரியலூர் அருகே க.பொய்யூரில் கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

அரியலூர், ஜூன் 18:அரியலூர் மாவட்டம், க.பொய்யூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை கடுகூர் ஊராட்சி தலைவர் தர்மலிங்கம் தொடக்கி வைத்தார். அரியலூர் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்து, கருச்சிதைவு நோய் குறித்து விவசாயிகளிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமலிங்கம், கால்நடை ஆய்வாளர் மாலதி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 30 பசுகன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.முன்னதாக, 4 முதல் 8 மாத வயதுடைய பசுங்கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு அடையாள காது வில்லைகள் பொருத்தப்பட்டது.

The post அரியலூர் அருகே க.பொய்யூரில் கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Abortion Disease ,Poiyur ,Ariyalur ,Dinakaran ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...