×

வெந்நீர் கொட்டியதில் ஒன்றரை வயது குழந்தை பலி

முஷ்ணம், ஜூன் 18: முஷ்ணம் அருகே ஆதிவராகநல்லூர் காலனி புதுத்தெருவை சேர்ந்தவர் அஞ்சாபுலி, சூரியகலா. இவர்களுக்கு கனிமொழி, கொளதமி என்ற இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கனிமொழி திருப்பூரில் பணிபுரியும் போது ராஜமன்னார்குடி சோராகுளம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் இவர்களுக்கு மூன்று வயதில் பிரித்தி என்கிற பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் கவின் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் கனிமொழி தனது தாய்வீட்டில் குழந்தைகளுடன் வந்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி கவினை குளிப்பாட்டுவதற்காக வீட்டின் பின்புறம் உள்ள தரை அடுப்பில் சுடுத்தண்ணீரை குவளையில் வைத்திருந்தனர்.

அப்போது, கவின் வீட்டின் பின்பக்க படிக்கட்டு வழியே வந்ததை யாரும் கவனிக்கவில்லை. படிக்கட்டில் நிலைத்தடுமாறி விழுந்ததில், அடுப்பில் இருந்த வெந்நீர் கவின் மீது கொட்டியது. இதில், சிறுவனின் முகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்யின்றி நேற்று கவின் இறந்தான். இதுகுறித்து கவின் தாய் கனிமொழி(27) முஷ்ணம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post வெந்நீர் கொட்டியதில் ஒன்றரை வயது குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Mushnam ,Anjapuli ,Suriyakala ,Athivaraganallur Colony Pudutheru ,Mushnam ,Kanimozhi ,Kolatami ,
× RELATED தூக்குபோட்டு கணவர் தற்கொலை