×

நாளை மின் தடை பகுதிகள்

ஊட்டி, ஜூன் 18: அதிகரட்டி துணை மின் நிலையத்தில் நாளை (19ம் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ் கூறியிருப்பதாவது, அதிகரட்டி துணை மின் நிலையத்தில் 19ம் ேததி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், இந்த துணை மின் நிலையத்தை சேர்ந்த அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணிஹட்டி, நான்சச், ஆருகுச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த துணை மின் நிலையத்தை சேர்ந்த உலிக்கல், மேலூர், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சாடா, சேலாஸ், பாரதிநகர், தூதூர்மட்டம், கரும்பாலம், கிளன்டேல், கொலக்கொம்பை, பென்காம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ் கூறியுள்ளார்.

The post நாளை மின் தடை பகுதிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Adhikaratti ,Dinakaran ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்