×

தூத்துக்குடியில் மாணவர்கள் திடீர் மோதல்

தூத்துக்குடி, ஜூன் 18: தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அரசினர் ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐக்கு அருகே அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஐடிஐ வழியாகவே சென்று வந்தனர். இதனால், இந்த பாதை வழியாக நடந்து செல்வதில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாணவர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட 4பள்ளி மாணவர்கள், 4ஐடிஐ மாணவர்கள் என 8மாணவர்களை பிடித்து, விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி, இதுபோன்ற பிரச்னைகளில் இனிமேல் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

The post தூத்துக்குடியில் மாணவர்கள் திடீர் மோதல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Arasinar IDI ,Goramballam, Thoothukudi ,IDI ,of Students ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...