×

மீன்பிடி துறைமுக அதிகாரிக்கு மிரட்டல் ஜேப்பியார் மகள் உட்பட 27 பேர் மீது வழக்கு

குளச்சல்: குமரி மாவட்டம் முட்டத்தில் தனியார் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை ஜேப்பியாரின் 4வது மகள் மரிய ஜுனா ஜாண்சன் நிர்வகித்து வருகிறார். இதில் சென்னையை சேர்ந்த கார்த்திக் (41) பொது மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அலுவலகத்தில் இருந்து பணிகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது ஜேப்பியாரின் 2வது மகள் ஷீலா மற்றும் அழிக்கால், கன்னியாகுமரி, முட்டத்தை சேர்ந்த நபர்கள் உள்பட பலர் பொது மேலாளர் அறைக்குள் புகுந்து தகாத வார்த்தையால் திட்டியதுடன் மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கார்த்திக் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் ஷீலா, அழிக்கால் பகுதியை சேர்ந்த ஜாண் மெண்டோ, கன்னியாகுமரியை சேர்ந்த சிவகுமார் உள்பட 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முன்விரோதம் காரணமாக மிரட்டல் விடுக்கப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மீன்பிடி துறைமுக அதிகாரிக்கு மிரட்டல் ஜேப்பியார் மகள் உட்பட 27 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Jappiyar ,Kulachal ,Muttam ,Kumari district ,Jeppiar ,Maria Juna ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது