×

திருவாடானை அருகே பூவாணி கிராமத்தில் புதிய தார்சாலை அமைக்க கோரிக்கை

திருவாடாைன, ஜூன் 17: திருவாடானை அருகே புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே பூவாணி யாதவர் குடியிருப்பு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள பிரதான சாலை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலையாக போடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.

இதனால் தினசரி இந்த சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் அவசரகால சிகிச்சை மற்றும் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸை அழைத்தால் கூட அப்பகுதிக்கு செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த தார்சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாடானை அருகே பூவாணி கிராமத்தில் புதிய தார்சாலை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puvani village ,Thiruvadana ,Tiruvadaina ,Thiruvadanai ,Bhovani ,
× RELATED வாகனங்களின் டயரை பஞ்சராக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை