×

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

 

உசிலம்பட்டி, ஜூன் 17: உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரை அடுத்துள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் பெரியகருப்பன் (20). இவர் தனது தோட்டத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மோட்டாரை பழுது பார்ப்பதற்காக நேற்று உள்ளே இறங்கினார். அப்போது நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், அவரது தலை பாறையில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பெரியகருப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே பெரியகருப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Easwaran ,Kamaraj Nagar ,Uthappanayakkanur ,Periyakaruppan ,
× RELATED துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்