×

குரோம்பேட்டை காவல் நிலையத்தில் 48 இருசக்கர வாகனங்கள் ஏலம்: போலீசார் அறிவிப்பு

தாம்பரம்: குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 48 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது, என்று போலீசார் தெரிவித்துள்ளர். இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக உரிமை கோராத கேட்பாரற்று, கிடந்த 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் குரோம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்ட 37 இருசக்கர வாகனங்களை, இதுவரையில் யாரும் உரிமை கோராத காரணத்தினாலும், வாகனத்தின் எண்களை வைத்து அதன் உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினாலும், மொத்தம் 48 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி வழக்குபதிவு செய்து வாகனங்களை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பகிரங்க ஏலம் ஸ்க்ரப்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள உள்ள ஏலதாரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவு எண் ஆதாரங்களுடன் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வரும் 30ம்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணிக்கு முன்பு வந்து முன்பதிவு கட்டணம் ரூ.500 செலுத்தி தங்களை பதிவு செய்யதுகொள்ள வேண்டும். பதிவு செய்த ஏலதாரர்கள் ஏலக்குழுவினர் முன்னிலையில் வரும் 3.07.2023 அன்று காலை 11 மணிக்கு குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பகிரங்க ஏலத்தில் கலந்து கொள்ளலாம். பதிவு செய்த நபர்கள் மட்டுமே பகிரங்க ஏலத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கான ஏலத்தொகையை அன்றைய தினமே 100 சதவீதம் செலுத்த வேண்டும். அதற்கான ஜிஎஸ்டி கட்டணம் செலுத்திய பின்பு விற்பனை ஆணை வழங்கப்படும். இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post குரோம்பேட்டை காவல் நிலையத்தில் 48 இருசக்கர வாகனங்கள் ஏலம்: போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Crompet Police Station ,Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!!