×

டெல்லி யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் மற்றும் 61 மாணவர்களுக்கு தீக்காயம்..!!

டெல்லி: டெல்லி முகர்ஜி நகரில் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 61 மாணவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகரில் அமைந்துள்ள மூன்றடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தகவலறிந்து 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதற்குள் கரும்புகையால், மூச்சு திணறல் எற்பட்டு மாணவர்கள் ஜன்னல் வழியாக தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கயிறுடன் மாணவர்கள் வெளியேறினர். மேலும் ஜன்னல் வழியாக வெளியெறிய மாணவர்கள் சுவரில் இருந்த ஏசி. இயந்திரங்கள் மீது குதித்து அங்கிருந்து தப்பினர். சரியான நேரத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சென்றதால், பெரிதாக பாதிப்புகள் ஏற்படவில்லை.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காராணமாக தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதில் 50 மாணவர்கள் காயமடைந்ததாகவும், யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீ விபத்தில் 61 மாணவர்களுடன் வணிக அலுவலகங்களில் இருந்த சில ஊழியர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post டெல்லி யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் மற்றும் 61 மாணவர்களுக்கு தீக்காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,UPSC Training ,Centre ,UPSC training centre ,Mukharjee ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...