தேவதானப்பட்டி, ஜூன் 16: தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரத்தில் தனியார் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் மாந்தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் மாந்தோட்டம் இருக்கும் பகுதியில் கல்லூரி வளாக பார்ம் மேலாளர் ராஜா, சூப்பர்வைசர் முனீஸ்வரன் மற்றும் விஜய் ஆகியோர் சென்ற போது மருகால்பட்டியைச் சேர்ந்த மருதாயி, சுகப்பிரியா, பாக்கியம், சுப்புராஜ், காளியாளன் ஆகியோர் மாங்காய்களை திருடி சாக்கு பையில் போட்டுள்ளனர்.
கல்லூரி வளாக பார்ம் மேலாளர் சத்தம் போடவே அவர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து கல்லூரி தலைவரின் சகோதரர் சிவாஜி (63) ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். ஜெயமங்கலம் எஸ்ஐ பிரபா வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில், 250 கிலோ மாங்காய், 400 மீட்டர் மின்வயரை திருடியதும், 200 அடி முள்வேலியை சேதப்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து சுகப்பிரியா மற்றும் பாக்கியம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்
The post தோப்பிற்குள் புகுந்து மாங்காய் திருடிய 2 பெண்கள் கைது: மேலும் 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.