மதுரை, ஜூன் 16: மதுரை மேற்கு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் நாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், ‘‘துவரிமான் கண்மாய்க்கு நீர்வரத்து வரும் கால்வாயையும், இக்கண்மாயில் இருந்து கிருதுமால் நதிக்கு செல்லும் கால்வாயையும் தூர்வார வேண்டும். மாடக்குளம் கண்மாயின் மதகுகள் உயரமாகவும், வாய்க்கால் பள்ளமாகவும் உள்ளது. அதனை சரி செய்து, தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க வேண்டும்.
தட்டானூர் கிராமம் பொட்டல்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும்’’ என்றனர். இதைத்தொடர்ந்து தோட்டக்கலை அலுவலர் சுருளீஸ்வரன், சொட்டுநீர் பாசனம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வாழைகளுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கினார். கூட்டத்தில் துணைத்தாசில்தார் வீரக்குமார், பொதுப்பணித்துறை பொறியாளர், வேளாண்மை துறையினர், தோட்டக்கலைத்துறையினர், கலந்து கொண்டனர்.
The post துவரிமான் கால்வாயை தூர்வார வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.