×

பீர் பாட்டிலில் டிரைவரை தாக்கியவர் கைது

 

கோவை, ஜூன் 16: கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (40). டிரைவர். இவரின் வீட்டின் அருகே உள்ள சதீஷ் (42) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் குடிபோதையில் அய்யப்பன் வீட்டிற்குள் நுழைந்தார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், சதீஷ், அய்யப்பனை போனில் தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் அழைத்து உள்ளார். இதையடுத்து, அவர் அங்கு சென்றபோது சதீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அய்யப்பனை பீர் பாட்டிலில் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அய்யப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பீளமேடு போலீசார் சதீஷ் மற்றும் அவரின் நண்பர்கள் 3 பேர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பீர் பாட்டிலில் டிரைவரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ayyappan ,Avarampalayam ,Dinakaran ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...