×

சண்டையை தடுத்தவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 3 பேருக்கு வலை

பெரம்பூர்: வியாசர்பாடி, கென்னடி நகரை சேர்ந்தவர்கள் தாமோதரன் (35) மற்றும் பிரபு (38). நண்பர்களான இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன், இவர்கள் அதே பகுதியில் நடந்து சென்றபோது, சுமன் என்பவருக்கும், வேறு இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த தாமோதரன், பிரபு ஆகிய இருவரும் சண்டையை தடுத்து, அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தாமோதரன் மற்றும் பிரபு ஆகிய இருவரும் தங்கள் வீட்டின் அருகே நின்றிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர், ‘‘நீங்கள்தானே சண்டை போட்ட எங்களை எச்சரித்தது’’, என்று கூறி தாமோதரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். தடுத்த பிரபுவுக்கும் கையில் காயம் ஏற்பட்டது. இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவேக், முரளி மற்றும் முருகன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

The post சண்டையை தடுத்தவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Perampur ,Vyasarbadi ,Kennedy ,Damotharan ,Prabhu ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு