×

முகநூல் பக்கத்தில் சர்சைக்குரிய வீடியோ பதிவு பாமக நிர்வாகிகள் 2 பேர் கைது

காஞ்சிபுரம்: முகநூல் பக்கத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்ட பாமக நிர்வாகிகள் 2 பேரை, காஞ்சிபுரம் சைபர் க்ரைம் போலீசார் செய்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவரை போலீசார் தேடிவந்த காலக்கட்டத்தில், தனது குழுவில் உள்ள வேறு யார் மீதாவது கை வைத்தால், அடுத்த 15 நிமிடங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள காவல் நிலையங்கள் குண்டு வைத்து தகர்க்கப்படும் என அப்போது அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் மறைந்த ஸ்ரீதரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்களான 2 பேர், சமூக வலைத்தளங்களில் ஸ்ரீதரின் படத்துடன் தனது குழுவை சேர்ந்த வேறு யாரையாவது கைது செய்தால், அடுத்த 15 நிமிடங்களில் காவல் நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப்படுமென வீடியோவில் பாடல் வரிகளை பதிவிட்டு அறிவிப்பினை, தங்களுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இந்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அளித்த புகாரின்பேரில், காஞ்சிபுரம் சைபர் க்ரைம் போலீசார், நேற்று சமூக வலைதளங்களில் ரவுடி ஸ்ரீதர் குறித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அறிவிப்பை வெளியிட்ட உழகோல்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (29), அவருக்கு உதவிய கிதிரிப்பேட்டை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ரோகித் (20) ஆகிய 2 பாமக நிர்வாகிகளை கைது செய்தனர். இதனையடுத்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post முகநூல் பக்கத்தில் சர்சைக்குரிய வீடியோ பதிவு பாமக நிர்வாகிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Facebook ,2 ,PAK ,Kanchipuram ,PAMA ,Dinakaran ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...