- கலைஞர் நூற்றாண்டு கூட்டம்
- Nanganallur
- அமித் ஷா
- திமுக
- டாக்டர்
- பாலு
- ஆலந்தூர்
- சென்னை தெற்கு மாவட்டம்
- ஆலந்தூர் தெற்கு வட்டாரம்
- கலைஞர் நூற்றாண்டு விழா
- ஸ்டேட் பாங்க் காலனி
- கலைஞர்
- நூற்றாண்டு
- தின மலர்
ஆலந்தூர்: சென்னை தெற்கு மாவட்டம், ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில், நங்கநல்லூர், ஸ்டேட் பாங்க் காலனியில் கலைஞர் நூற்றாண்டு விழா இசையரங்கம் மற்றும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மண்டல குழுத் தலைவரும் ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளருமான என்.சந்திரன் தலைமை தாங்கினார். வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், பகுதி நிர்வாகிகள் சுந்தர்ராஜன் ஆர்.பாபு, கவுன்சிலர்கள் சாலமோன், ராஜேஸ்வரி, ரமேஷ் முன்னிலை வகித்தனர். 167வது வட்ட செயலாளர் ஜெ.நடராஜன் வரவேற்று பேசினார். கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பட பின்னணி பாடகர்கள் கலைமாமணி மாலதி லட்சுமணன், முகேஷ் ஆகியோரின் இசையரங்கம் நடைபெற்றது.
இதன்பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் டி.ஆர்.பாலு எம்பி பேசியதாவது;ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். பாஜ, ஆர்எஸ்எஸ் போன்றவை வருவதற்கு முன் ஜனசங்கம் இருந்தது. எமர்ஜென்சி காலத்தில் ஜனசங்கத்தை கலைத்துவிட்டு ஓடிவிட்டனர். ஆனால், எமர்ஜென்சியிலும் போராடி வென்ற ஒரே கட்சி திமுகதான். இதுபோன்ற வரலாறுகள் தெரியாமல் அமித்ஷா பேசி வருகிறார்.இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் திருநீர்மலை ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.பாஸ்கர், ஆர்.டி.பூபாலன், சதீஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ். மாவட்ட பிரதிநிதிகள் ரமணா, லியோ பிரபாகர், வெள்ளைச்சாமி, மதிவாணன், வட்ட செயலாளர்கள் ஜே.ஏசுதாஸ், கே.பி.முரளிகிருஷ்ணன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், வேலவன், சீனிவாசன், கருணாநிதி, மணப்பாக்கம் ரவி, கவுன்சிலர்கள் செல்வேந்திரன், அமுதப்பிரியா செல்வராஜ், கேபிள் டிவி ராஜா, விஜய்பாபு, மணிகண்டன், சந்திரசேகர், சதீஷ், அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நங்கநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டம்; திமுகவின் வரலாறு தெரியாமல் அமித்ஷா பேசுகிறார்: டி.ஆர்.பாலு எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.