×

முதியவரை தாக்கிய வாலிபர் கைது

 

வடமதுரை, ஜூன் 15: வடமதுரையை அடுத்து கடவூர் கிராமம் அருகே உள்ள தெற்கு அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (59). விவசாயியான இவருக்கும், இவரது உறவினர் மாமரத்துப்பட்டியை சேர்ந்த கருப்பசாமியின் தங்கை தனம் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை நீண்ட நாட்களாகவே இருந்து வந்துள்ளது. கருப்பசாமிக்கு ராமசாமி ஆதரவாக இருப்பதாக தனம் நினைத்துள்ளார். இதனால் கருப்பசாமிக்கும் தனத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ராமசாமி மாமரத்துப்பட்டிக்கு வந்த போது தனம் தனது உறவினர்களுடன் சென்று ராமசாமியிடம் தகராறு செய்துள்ளார்.

தகராறு முற்றிய நிலையில் தனம் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து ராமசாமியை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த ராமசாமி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் தனம் மற்றும் அவரது உறவினர்களான பழனிவேல், தீபக்(24), பார்த்தசாரதி ஆகிய 4 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து, தீபக்கை கைது செய்து விசாரித்து வருகிறார்.

The post முதியவரை தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Ramasamy ,South Ayyambalayam ,Kadavur village ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...