×

மாப்பிள்ளையூரணி பகுதியில் ரூ.1.31 கோடியில் புதிய தார் சாலை பணி சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, ஜூன் 15: மாப்பிள்ளையூரணி பகுதியில் ரூ.1.31 கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி யூனியன் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட வடக்கு சோட்டையன்தோப்பு முதல் எட்டயபுரம் சாலை வரை தமிழ்நாடு முதலமைச்சரின் 2022-23ம் ஆண்டிற்கான கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, காமராஜ்நகரில் நடைபெற்றது. பஞ். தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். சண்முகையா எம்எல்ஏ பூமி பூஜையில் கலந்து கொண்டு சாலை பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் யூனியன் கவுன்சிலர்கள் அந்தோனிதனுஷ்பாலன், தொம்மை சேவியர், பஞ். வார்டு உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, வசந்தகுமாரி, சக்திவேல், ஒன்றிய திமுக துணை செயலாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, பிடிஓக்கள் வசந்தா, ஹெலன் பொன்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பஞ். செயலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

The post மாப்பிள்ளையூரணி பகுதியில் ரூ.1.31 கோடியில் புதிய தார் சாலை பணி சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Shanmugaiah MLA ,Mappillayurani ,Thoothukudi ,Mappillaiyurani ,Dinakaran ,
× RELATED கனிமொழி எம்பியை ஆதரித்து கோவில்பட்டி,...