×

திருவாலங்காடு அருகே ரயில் நிலையத்தில் பெண் மர்மச்சாவு: அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை

திருத்தணி: திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே உள்ள மணவூர் ரயில் நிலையத்தில் நேற்று 53 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சென்னையை நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசு பெண்ணின் சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

ரயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்த கிடந்த பெண் திருவாலங்காடு ஊராட்சி பாஞ்சாலை நகர் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி சுமதி(53) என தெரிய வந்துள்ளது. சுமதியின் கணவர் சரவணன் திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக பணியாற்று வருகிறார். இதுகுறித்து அரக்கோணம் ரயியில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுமதி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது குடும்பத் தகராறில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவாலங்காடு அருகே ரயில் நிலையத்தில் பெண் மர்மச்சாவு: அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Arakkonam railway police ,Tiruvalangadu ,Thiruthani ,Manavur railway station ,Thiruvalankadu ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...