×

‘எனக்கு யாருமே மரியாதை தரல…’மனைவி கழுத்தை அறுத்த கணவர்

ஆட்டையாம்பட்டி: வீட்டில் யாரும் போதிய மரியாதை தராததால் ஆத்திரம் அடைந்த தறித்தொழிலாளி மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே ஆட்டையாம்பட்டி வேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). தறித்தொழிலாளி. இவரது மனைவி சுசீலா (53). இவர்களுக்கு 2 மகன், மகள் உள்ளனர். மகளுக்கு கடந்த 1ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆறுமுகத்திற்கு குடிப் பழக்கம் உள்ளது. அவருக்கு சொந்தமான நிலத்தில், கடன் பெற்று வீட்டை கட்டியுள்ளார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஆறுமுகம் காய்கறி வெட்டும் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுசீலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆறுமுகம், வீட்டில் தனக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. என்னை ஒதுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது என்னை மனைவி கீழே தள்ளிவிட்டார். ஆத்திரமடைந்த நான் கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து விட்டேன் என தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

The post ‘எனக்கு யாருமே மரியாதை தரல…’மனைவி கழுத்தை அறுத்த கணவர் appeared first on Dinakaran.

Tags : Attaiyambatti ,
× RELATED சாலை விபத்தில் பெயிண்டர் பலி