×

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை: எம்பி, எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எம்பி நிதியிலிருந்து, அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையை செல்வம் எம்பி, எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் எம்பி செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி அருகில் நிழற்குடை திறப்பு விழா, காஞ்சிபுரம் நசரத்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, ராணி அண்ணாதுரை அரசு மேல்நிலைப்பள்ளி, பிள்ளையார் பாளையம் சிஎஸ்எம் மேல்நிலைப்பள்ளி ஆகிய அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் எம்பி செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் திறந்து வைத்து, மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை மூலம் ஏற்படும் பயன்கள் பற்றி அறிவுரைகளை வழங்கினர். இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதில், மண்டல தலைவர் சசிகலா கணேஷ் மாநகராட்சி உறுப்பினர்கள் மல்லிகா ராமகிருஷ்ணன், சுரேஷ், சுப்புராயன் கமலக்கண்ணன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் முத்து செல்வம், பகுதி செயலாளர்கள் திலகர், வெங்கடேசன், தசரதன், சிகாமணி, மாமல்லன், அரவிந்த் குமார், சம்பத், குமரேசன், ஜெகநாதன், இளைஞர் அணி யுவராஜ், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ – மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை: எம்பி, எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Selvam ,Sundar ,Ehilarasan ,Kanchipuram Parliamentarians ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்