×

நீட் தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் 2 ஆகாஷ் பைஜூஸ் மாணவர்கள் ரேங்க் பெற்று சாதனை

சென்னை: நீட் தேர்வில் சென்னையைச் சேர்ந்த 2 ஆகாஷ் பைஜூஸ் மாணவர்கள் முதல் 10 இடங்களுக்கு கீழே ரேங்க் பெற்றுள்ளனர். மேலும், AIR 3 மற்றும் 6ஐ ஆகாஷியன்கள் பிடித்துள்ளனர். நாடு முழுவதிலும் நீட் தேர்வை 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதற்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இத்தேர்வில், தேர்வு தயாரிப்பு சேவைகளில் தேசிய தலைவரான ஆகாஷ் பைஜூஸ் சென்னையின் 2 மாணவர்கள் முதல் 10 இடங்களுக்கு கீழ் ரேங்க் பெற்று வரலாறு படைத்துள்ளனர். மாணவன் கௌஸ்தவ் பவுரி 716/720 உடன் AIR 3ஐ பெற்றுள்ளார். சூர்யா சித்தார்த் நாகராஜன் என்ற மாணவன் 715/720 உடன் AIR 6ஐ பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான இரண்டு ஆண்டு வகுப்பறை திட்டத்தில் இந்த மாணவர்கள் ஆகாஷுடன் சேர்ந்தனர். இதுகுறித்து, மாணவர்கள் கூறுகையில் “ஆகாஷ் உள்ளடக்கம் மற்றும் பயிற்சி இரண்டிலும் எங்களுக்கு உதவியதற்கு நன்றி. இவை இல்லாமல் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளை நாங்கள் புரிந்துகொண்டிருக்க மாட்டோம்” என்றனர். ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் மகேஸ்வரி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கையில், “மாணவர்களின் முன்மாதிரியான சாதனைக்காக வாழ்த்துகிறோம்.

கௌஸ்தவ் மற்றும் சூர்யாவின் சாதனை அவர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகிறது. மாணவர்களின் முயற்சிகள், ஆசிரியர்களின் முறையான வழிகாட்டுதல் மற்றும் நிறுவனத்தில் தரமான தேர்வுக்கான தயாரிப்பு ஆகியவற்றிற்கு இந்த பெருமை செல்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால முயற்சிகளுக்கு அவர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

The post நீட் தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் 2 ஆகாஷ் பைஜூஸ் மாணவர்கள் ரேங்க் பெற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Aakash ,Paijus ,Chennai ,Aakash Pyjus ,Dinakaran ,
× RELATED ஜேஇஇ முதன்மை தேர்வில் ஆகாஷ்...