×

செய்யூரில் ஜமாபந்தி நிறைவுநாளில் ரூ.49 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ பாபு வழங்கினார்

செய்யூர்: செய்யூரில் நடந்த ஜமாபந்தி நிறைவுநாளில் பொதுமக்களுக்கு ரூ.49 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பனையூர் பாபு வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டாரத்தில் கடந்த மாதம் 30ம் தேதி ஜமாபந்தி முகாம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. 16 நாட்கள் நடந்த இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 833 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களில் 250 பேர் தகுதி வாய்ந்த பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சமும், 45 லட்சத்து 47 ஆயிரத்து 768 வீதம் 82 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 11 பேருக்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 500 மதிப்பில் திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு நிவாரணம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் 50 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் என பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஜமாபந்தி நிறைவு விழா செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலரும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பேபி இந்திரா தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் சுபலட்சுமி பாபு, ஏழுமலை, துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, வட்டாட்சியர் பெருமாள் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், மனுக்கள் மறுபரிசீலனைக்கு அனுப்பப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், சிற்றரசு, இடைக்கழிநாடு பேரூர் செயலாளர் மோகன்தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆதவன், செய்யூர் ஊராட்சி தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம் உள்ளிட்ட திமுகு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செய்யூரில் ஜமாபந்தி நிறைவுநாளில் ரூ.49 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ பாபு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Babu ,day of Jamabandhi ,Didur ,Deodur ,Panayur Babu ,Day of Jamapandhi ,Chitur ,Brinkalputtu ,Day of Jamabandi ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...