ராணிப்பேட்டை: பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பெற்றோரை கொன்றுவிடுவோம் என மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பெட்டிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கார் டிரைவர், தாய் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தம்பதியினர் தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி(37) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் சுவர் ஏறி குதித்து, தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் ‘யாரிடமாவது சொன்னால், உனது தாய், தந்தையை கொன்றுவிடுவேன்’ என மிரட்டி உள்ளார். இதையடுத்து தொடர்ந்து பலமுறை சிறுமிக்கு பாலியல் ெதால்லை கொடுத்துள்ளார்.
இதையறிந்த அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சந்திரன்(55) என்பவரும், சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறுமி சோர்வாக இருப்பதை கவனித்த பெற்றோர் விசாரித்தனர். அப்போது, சிறுமி நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின், சப்-இன்ஸ்பெக்டர் சீதா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, சந்திரன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதானவர்களில் சந்திரனுக்கு திருமணமாகி 2 மகன்களும், முனியாண்டிக்கு 2 மகள்களும் உள்ளனர்.
The post 13 வயது மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம்: பெட்டிக்கடைக்காரர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.