×

இணையதளத்தை முடக்குபவர்கள் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

புதுச்சேரி: இணையதளத்தை முடக்குபவர்கள் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. டாடா மோட்டார்ஸ் 15-ம் ஆண்டு என்று வருகின்ற லிங்கை தொட வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிங்க் வாட்ஸ் அப் லிங்கை தொட வேண்டாம்; அந்த லிங்கை மற்றவர்களுக்க பகிர வேண்டாம். லிங்கை கிளிக் செய்தால் செல்போன் ஹேக் செய்யப்பட்டு வாட்ஸ் அப் தகவல்கள் அனைத்து திருடப்படும். தகவல்கள் திருடப்பட்டு செல்போன் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடும் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post இணையதளத்தை முடக்குபவர்கள் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Tata Motors ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை