×

திருவிடைமருதூர் அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருவிடைமருதூர், ஜூன் 14: திருவிடைமருதூர் காவல் உட்கோட்டத்தில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது 24 பவுன் நகையை கைப்பற்றினர். திருவிடைமருதுார் வட்டம் பந்தநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட மரத்துறை, நெய்க்குப்பை, மேலக்காட்டூர் ஆகிய பகுதிகளில், பூட்டிக்கிடந்த 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக பந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பந்தநல்லூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த, அதே பகுதி சாய்னாபுரத்தை சேர்ந்த ஜோதிமணி மகன் ஆசைமணி (24), கருணாநிதி மகன் விக்னேஷ் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து செயின், மோதிரம், பிரேஸ்லெட், காது தோடு போன்ற 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகளையும் மீட்டனர். இதேபோல் சோழபுரம் பகுதியில் மூதாட்டியை ஏமாற்றித் தங்க செயினை திருடிச் சென்ற மர்ம நபரை சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். அவர் சோழபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் ஆசைக்குமாரை (42) கைது செய்து அவரிடமிருந்து நாலரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

The post திருவிடைமருதூர் அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்ட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvidaimarudur ,Tiruvidaimarudur ,Police Subdistrict ,
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை