×

அரசு பள்ளியில் கிடந்த முதியவர் சடலம் மீட்பு

அயோத்தியாப்பட்டணம், ஜூன் 14: அயோத்தியாப்பட்டணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் நாளில் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர். அவர்களுக்கு முதல் நாளிலேயே புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வகுப்பறை முன்பு, சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பதை பார்த்து மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தலைமை ஆசிரியர் பென்னிங்ஸ் தங்கராஜ், காரிப்பட்டி போலீசாருக்கு தெரிவித்துள்ளார். இதன் பேரில் பள்ளிக்கு விரைந்து வந்த காரிப்பட்டி போலீசார் அடையாளம் தெரியாத, 75 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விஏஓ விஜயராஜா புகாரின் பேரில், காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பள்ளியில் கிடந்த முதியவர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Ayodhyapatnam ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு